என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நாட்டு நலப்பணித்திட்ட நிறைவு விழா
    X

    நாட்டு நலப்பணித்திட்ட நிறைவு விழா

    • நாட்டு நலப்பணித் திட்ட மாணவ, மாணவிகள், பொதுமக்கள், இளைஞர்கள் என பலரும் பங்கேற்றனர்.
    • முடிவில் மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

    ஊத்தங்கரை,

    கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அடுத்த காரப்பட்டு யுனிக் கல்லூரி சார்பில் கீழ்மத்தூர் கிராமத்தில் நடைபெற்ற நாட்டு நலப்பணித்திட்ட நிறைவு விழா நடைபெற்றது.

    கல்லூரி நிறுவனர் அருள் தலைமை தாங்கினார்.செயலாளர் தமிழரசு முன்னிலை வகித்தார். முதல்வரும், தமிழ்த்துறை தலைவருமான கிருஷ்ணகுமாரி வாழ்த்தி பேசினார். கீழ்மத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் மணிகண்டன், கொம்மம்பட்டு அரி வர்ஷன் அனிமல் பீஸ்ட் அர்ஜீனன், கீழ்மத்தூர் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் நிறைமதி ஆகியோர் கலந்து கொண்டனர்.

    ஏழு நாட்கள் நடந்த நிகழ்வில் நாட்டு நலப்பணி திட்டத்தின் சிறந்த சேவகர்களாக செயலபட்ட தமிழ்த்துறை இரண்டாம் ஆண்டு மாணவி கார்த்திகா, தாவரவியல் துறை இரண்டாம் ஆண்டு மாணவன் தினேஷ் ஆகியோருக்கும், நாட்டு நலப்பணித் திட்டத்தில் சிறப்பாக செயல்பட்ட பேராசிரியர்கள் கதிரவன், மோகனா, பிரதீஸ்வரன் ஆகியோருக்கு நிறுவனர் அருள் பாராட்டு சான்றிதழ்கள் மற்றும் நினைவு பரிசுகளை வழங்கினார்.

    விழாவில் நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர்கள், விலங்கியல் துறைத் தலைவர் உதவிப் பேராசிரியர் குபேந்திரன், கணிதத் துறைத் தலைவர் கோவிந்தன், கணினி அறிவியல் துறைத் தலைவர் சங்கர், துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள், நாட்டு நலப்பணித் திட்ட மாணவ, மாணவிகள், பொதுமக்கள், இளைஞர்கள் என பலரும் பங்கேற்றனர்.

    முடிவில் மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. முன்னதாக தமிழ் இலக்கியம் இரண்டாம் ஆண்டு மாணவி கார்த்திகா வரவேற்புரை ஆற்றினார். ஆங்கிலத்துறை இரண்டாம் ஆண்டு மாணவன் சயின்ஷா நன்றி கூறினார்.

    Next Story
    ×