என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பிரபல ரவுடி 6-வது முறையாக குண்டர் சட்டத்தில் அடைப்பு
    X

    பிரபல ரவுடி 6-வது முறையாக குண்டர் சட்டத்தில் அடைப்பு

    • அம்மன் கோவில் அருகே கன்னங்குறிச்சி, சின்னண்ணன் தெருவை சேர்ந்த ராஜா என்பவரை வழிமறித்து 2,800 ரூபாயை பறித்தார்.
    • இதை தட்டிக்கேட்ட பொது மக்களை, கத்தியை காட்டி மிரட்டி விட்டு, அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

    சேலம்:

    சேலம் கோரிமேடு சீதா கார்டனை சேர்ந்தவர் கார்த்திக் (வயது 40). பிரபல ரவுடி. இவர் கடந்த பிப்ரவரி மாதம் 19-ந்ேததி பெரிய கொல்லப்பட்டி அம்மன் கோவில் அருகே கன்னங்குறிச்சி, சின்னண்ணன் தெருவை சேர்ந்த ராஜா என்பவரை வழிமறித்து 2,800 ரூபாயை பறித்தார். இதை தட்டிக்கேட்ட பொது மக்களை, கத்தியை காட்டி மிரட்டி விட்டு, அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

    இந்த சம்பவம் தொடர்பாக கன்னங்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து கார்த்திக்கை கைது செய்தனர். விசாரணையில், அவர் மீது 2022-ல் கன்னங்குறிச்சி, அழகாபுரம் போலீஸ் நிலையத்தில் வழிப்பறி வழக்கு தற்போது நிலுவையில் இருப்பதும், மேலும் 2005, 2014, 2017, 2018, 2020- ஆகிய ஆண்டுகளில் வரிசையாக குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார் என்பதும் தெரியவந்தது.

    இந்த நிலையில் அவர் ஜாமீனில் வெளியே வந்து தொடர்ந்து குற்றச் செயல்க ளில் ஈடுபட்டு வந்ததால் அவரை குண்டர் சட்டத்தில் அடைக்க சேலம் மாநகர போலீஸ் கமிஷனர் விஜய குமாரி நேற்று உத்தர விட்டார். அதன்படி போலீ சார், கார்த்திக்கை கைது செய்து சேலம் மத்திய சிறை யில் அடைத்தனர். இதனை தொடர்ந்து 6-வது முறை யாக அவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது,

    Next Story
    ×