என் மலர்
உள்ளூர் செய்திகள்

புளியம்பட்டியில் மர்மமான முறையில் இறந்து கிடந்த வாலிபர்.
பழனி அருகே வடமாநில தொழிலாளி அடித்துக்கொலை?
- இறந்து கிடந்த வாலிபர் கருப்புநிற நிற டி-சர்ட் மற்றும் பேண்ட் அணிந்திருந்தார். அவர் முகம் மற்றும் கால்களில் காயங்கள் ஏற்பட்டு இருந்தது.
- பழனி மற்றும் சுற்றுப்புற பகுதியில் அதிக அளவு தனியார் மில்கள் இயங்கி வருகின்றன. இந்த மில்களில் வடமாநில தொழிலாளர்களே பெரும்பாலும் பணிபுரிந்து வருகின்றனர்.
பழனி:
பழனி அருகே புளியம்பட்டியில் நேற்று மாலை சுமார் 25 வயது மதிக்கத்தக்க வாலிபர் இறந்து கிடந்தார். கருப்புநிற நிற டி-சர்ட் மற்றும் பேண்ட் அணிந்திருந்தார். அவர் முகம் மற்றும் கால்களில் காயங்கள் ஏற்பட்டு இருந்தது.
இது குறித்து கீரனூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து அவரது உடலை கைப்பற்றி பழனி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இறந்தவர் வடமாநிலத்தைச் சேர்ந்த மில் தொழிலாளியாக இருக்கலாம் என போலீசார் சந்தேகித்துள்ளனர். பழனி மற்றும் சுற்றுப்புற பகுதியில் அதிக அளவு தனியார் மில்கள் இயங்கி வருகின்றன. இந்த மில்களில் வடமாநில தொழிலாளர்களே பெரும்பாலும் பணிபுரிந்து வருகின்றனர்.
இது மட்டுமின்றி பழனியில் சாலையோர வியாபார கடைகளிலும் வடமாநில தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களில் யாரேனும் தாக்கியதில் இறந்திருக்கலாம் என்றும் சந்தேகம் எழுந்துள்ளது. இது குறித்து கீரனூர் இன்ஸ்பெக்டர் தென்னரசன், சப்-இன்ஸ்ெபக்டர் கணேசன் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வாலிபர் இறந்து 3 நாட்களுக்கு மேல் ஆகி இருக்கும் என்றும் அவரது புகைப்படத்தை வைத்து அவர் யார்? கொலை செய்யப்பட்டாரா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.






