search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சத்தம் எழுப்பி வன விலங்குகளை விரட்டும் மூங்கில் கருவி
    X

    சத்தம் எழுப்பி வன விலங்குகளை விரட்டும் மூங்கில் கருவி

    • கிருஷ்ணகிரி அருங்காட்சியகத்தில் கருவி ஒன்று வைக்கப்பட்டுள்ளது.
    • சத்தம் எழுப்பி காட்டு விலங்குகளை அந்த கருவி விரட்டும்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி அரசு அருங்காட்சியகத்தில் ஒவ்வொரு மாதமும் ஒரு வரலாற்று பொருள் காட்சிப்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி, இந்த மாதத்திற்கான காட்சி பொருளாக வன விலங்குகளை விரட்டும் மூங்கில் கருவி காட்சிப்படுத்தப்பட்டு உள்ளது.

    இது குறித்து அருங்காட்சியக காப்பாட்சி யர் கோவிந்தராஜ் கூறியதா வது:-

    கிருஷ்ணகிரி மாவட்டம் வனப்பகுதியை ஒட்டி உள்ளதால், கேரளாவின் பசுமையான வனங்களைப் போல் இருக்கும். விவசாய நிலங்கள் வனப்பகுதியை யொட்டி உள்ளதால், யானை, காட்டுப் பன்றிக் கூட்டங்கள் அடிக்கடி வந்து விவசாய நிலங்களை நாசம் செய்துவிடும்.

    விலங்குகளை விரட்ட மின்வேலி, பட்டாசு போன்றவற்றைக் கிராம மக்கள் பயன்படுத்துவது இல்லை. காவலும் காப்பதில்லை. ஆனால் விலங்குகளிடம் இருந்து பயிர்களைக் காக்க அவர்கள் பயன்படுத்திய வழிமுறைதான் மூங்கில் பன்றி முடுக்கி. லிட்டர் படி அளவிலான சுற்றளவு கொண்ட மூங்கிலின் மூன்று கணுக்களை முழுசாக வெட்டி எடுத்துக் கொண்டு, நடுக் கணுவில் வாசல் போலத் துளையிட்டு காற்றோட்டம் இருக்கும்படி செய்கின்றனர். மேல், கீழ் கணுக்களைச் செதுக்கி வில்லைப் போல வளைத்து, கயிற்றை இறுக்கிக் கட்டிக் கொள்கின்றனர்.

    இப்போது அம்புபோல ஒரு குச்சியை அந்தக் கயிற்றில் கட்டிவிடுகிறார்கள். இதைப் போல நிறைய செய்து விவசாய நிலத்தை சுற்றி இருக்கும் மரங்களில் கட்டி தொங்க விடுகின்றனர். காற்று வீசும்போது விரட்டியின் நடுவில் கட்டி இருக்கும் குச்சி, மூங்கில் பொனாய் மேல் மோதும். அப்போது மத்தளம் அடிப்பது போல் டம டம என்று சத்தம் வரும். மேலும் மூங்கில் தட்டி, மனிதன் நிற்பபோல் காட்சியளிப்பதாலும், டம டம சத்தத்தாலும், யானை, பன்றி உள்ளிட்ட வன விலங்குகள் அனைத்தும் இந்த சத்தம் கேட்டு ஓடிப்போய்விடும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×