search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    உரிமம் இல்லாமல் பட்டாசு விற்பனை செய்தல் கூடாது
    X

    உரிமம் இல்லாமல் பட்டாசு விற்பனை செய்தல் கூடாது

    • அருரில் உரிமம் இல்லாமல் பட்டாசு விற்பனை செய்யக் கூடாது என்று ஆர். டி.ஒ. எச்சரிக்கை செய்தார்.
    • போலீஸ் மற்றும் தீயணைப்பு துறையினர் நேரில் ஆய்வு மேற்கொள்ள வேண்டும்.

    அரூரில் உரிமம் பெறாமல் பட்டாசுகளை விற்பனை செய்ய கூடாது என அரூர் ஆர்.டி.ஓ வில்சன் ராஜசேகர் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது;-

    தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நிரந்தர மற்றும் தற்காலிக உரிமம் பெற்ற கடைகளில் பட்டாசுகள் விற்பனை செய்யும் இடங்களை வருவாய், போலீஸ் மற்றும் தீயணைப்பு துறையினர் நேரில் ஆய்வு மேற்கொள்ள வேண்டும். பட்டாசு கடைகளில் பிற பொருள்களை விற்பனை செய்தல் கூடாது. அனுமதிக்கப்பட்ட அளவிற்கு கூடுதலாக பட்டாசுகளை இருப்பு வைத்திருத்தல் கூடாது. பட்டாசு கடைகளின் அருகில் தீத்தடுப்பு சாத னங்களை வைத்திருத்தல் வேண்டும்.

    பட்டாசு கடைகளின் அருகில் எளிதில் தீப்பற்றக்கூடிய தீக்குச்சிகள், மெழுகு வர்த்திகள், விளக்குகளை வைத்திருக்க கூடாது. தீபாவளி பண்டிகை யொட்டி, அனைத்து பட்டாசு கடைகளையும் பாதுகாப்பான முறையில் செயல்படுத்த வணிகர்கள் மற்றும் பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் எனவும் அவரது செய்திக் குறிப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

    Next Story
    ×