என் மலர்
உள்ளூர் செய்திகள்

நீலகிரி மாவட்ட கிராம ஊராட்சி துணைத்தலைவர்கள் கூட்டமைப்பு ெதாடக்கம்
- 35 கிராம ஊராட்சிகள் உள்ளன.
- 15 ஊராட்சிகளின் துணைத்தலைவர்கள் கலந்துக்கொண்டனர்.
ஊட்டி,
நீலகிரி மாவட்டத்தில் 35 கிராம ஊராட்சிகள் உள்ளன. இந்த 35 ஊராட்சிகளில், துணைத்தலைவர்களாக உள்ளவர்கள் ஒன்றிணைந்து மாவட்ட அளவிலான கூட்டமைப்பு ஏற்படுத்தி, ஊட்டியில் உள்ள தனியார் ஹோட்டல் கூட்ட அரங்கில் ஆலோசனைக் கூட்டம் நடைப்பெற்றது. இதில் 15 ஊராட்சிகளின் துணைத்தலைவர்கள் கலந்துக்கொண்டனர். இக்கூட்டத்தில், ஊராட்சி துணைத்தலைவர்களின் அதிகாரங்கள், தங்களது ஊராட்சியில் நடந்த பணிகள், மத்திய, மாநில அரசுகளின் மானியத்தில் நிறைவேற்றப்பட்ட பணிகள், குடிநீர், சுகாதாரம், தெருவிளக்கு மற்றும் குப்பையில்லா கிராமாக மாற்றிட எடுக்கப்பட்ட நடவடிக்கை, 100-நாள் வேலைத்திட்ட முன்னேற்றங்கள் மற்றும் ஊதியம் முழுமையாக பெறுவதில் உள்ள நடைமுறை சிக்கல்கள், அண்ணா மறுமலர்ச்சி திட்ட பணிகள், ஐல்ஜீவன் திட்டப்பணிகள் மற்றும் பல்வேறு செயலாக்கப்பணிகள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. கூட்டத்தில் துணைத்தலைவர்களான உல்லத்தி ராஜவேணி, கடநாடு ஆஷா, மேல்குந்தா வீரமலை, முள்ளிகூர் காமராஜ், தூனேரி சுப்பிரமணி, பேரட்டி சுகுணா, உபதலை செல்வகுமார் மூர்த்தி, கோத்தகிரி தேனாடு அம்சவேனி, கெங்கரை பாபு, குஞ்சப்பனை மஞ்சுளா, நெலாக்கோட்டை நவ்புல் ஹரீப், நஞ்சநாடு அருண்குமார் ஆகியோர் கலந்துக்கொண்டனர். தொடர்ந்து கூட்டமைப்பின் தலைவராக பாலகொலா ஊராட்சி துணைத்தலைவர் மஞ்சை மோகன் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும் 5 பேர் கொண்ட கூட்டமைப்பு ஆலோசனை குழு ஏற்படுத்தவும் முடிவுசெய்யப்பட்டது.
முன்னதாக சேரங்கோடு துணைத்தலைவர் சந்திரபோஸ் வரவேற்றார். முடிவில் தெங்குமரஹாட துணைத்தலைவர் செல்வம் நன்றி கூறினார்.






