search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நிலக்கோட்டை : 3 மாதங்களாக சம்பளம் இன்றி தவிக்கும் 100 நாள் வேலைதிட்ட பயனாளிகள்
    X

    கோப்பு படம்

    நிலக்கோட்டை : 3 மாதங்களாக சம்பளம் இன்றி தவிக்கும் 100 நாள் வேலைதிட்ட பயனாளிகள்

    • நிலக்கோட்டை ஒன்றியத்தில் கடந்த 3 மாதத்திற்கு மேலாக 100 நாள் வேலை திட்ட பணியாளர் களுக்கு சம்பளம் வழங்கவில்லை.
    • மாவட்ட கலெக்டர் இதில் தலையிட்டு தீர்வு காணவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

    நிலக்கோட்டை:

    நிலக்கோட்டை ஒன்றி யத்தில் 23 ஊராட்சிகள் உள்ளன. இதில் சுமார் 50ஆயிரத்திற்கும் மேற்பட்ட பணியாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர். பெரும்பாலான பொது மக்கள் விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த கூலித்தொழிலாளர்களாக உள்ளனர்.

    கடந்த 3 மாதத்திற்கு மேலாக 100 நாள் வேலை திட்ட பணியாளர்களுக்கு சம்பளம் வழங்கவில்லை. தீபாவளி பண்டிகை அடுத்த வாரம் கொண்டாடப்பட உள்ள நிலையில் தங்களுக்கு சம்பளத்தை விரைவில் பணம் வழங்க வேண்டும் என எதிர்பார்த்துள்ளனர்.

    இதுகுறித்து அதிகாரி களிடம் கேட்டபோது கடந்த 3 மாதங்களாக பல்வேறு ெதாழில்நுட்ப குறைபாடு களால் 3 மாதங்களாக சம்பளம் வழங்கப்பட வில்லை. விரைவில் சம்பளம் வழங்க நட வடிக்கை எடுக்கப்படும் என்றனர். மாவட்ட கலெக்டர் இதில் தலையிட்டு தீர்வு காணவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×