search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கழுகுமலையில் ரூ.15 லட்சம் மதிப்பில் புதிய ரேசன் கடை- கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்
    X

    புதிய ரேசன் கடையை கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ. திறந்து வைத்து குத்து விளக்கேற்றிய காட்சி.

    கழுகுமலையில் ரூ.15 லட்சம் மதிப்பில் புதிய ரேசன் கடை- கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்

    • உதயநிதி ஸ்டாலினை தி.மு.க. முன்னிலைப்படுத்த தொடங்கியதும் அவர் எம்.எல்.ஏ., அமைச்சர் பதவிகளுக்கு வருவார் என்று நாங்கள் எதிர்பார்த்தோம்
    • மாற்றம் என்று சொல்லிய தி.மு.க. இன்றைக்கு மக்களுக்கு ஏமாற்றத்தினை பரிசாக தந்துள்ளது.

    கோவில்பட்டி:

    கோவில்பட்டி அருகே உள்ள கழுகுமலையில் சட்டமன்ற உறுப்பினர் நிதயின் கீழ் ரூ. 15 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய ரேசன் கடை திறப்பு விழா நடைபெற்றது.

    ரேசன்கடை திறப்பு

    முன்னாள் அமைச்சரும், கோவில்பட்டி எம்.எல்.ஏ.வுமான கடம்பூர். ராஜூ கலந்து கொண்டு ரேசன் கடையை திறந்து வைத்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    உதயநிதி ஸ்டாலினை தி.மு.க. முன்னிலைப்படுத்த தொடங்கியதும் அவர் எம்.எல்.ஏ., அமைச்சர் பதவிகளுக்கு வருவார் என்று நாங்கள் எதிர்பார்த்தோம். வேறு வழி இல்லாமல் தி.மு.க . முன்னணி தலைவர்கள் உதயநிதி ஸ்டாலினை ஏற்றுக்கொள்ளும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

    ஆவின் விலை எற்றம்

    வார்த்தைகளுக்காக உதயநிதி ஸ்டாலினை புகழந்து பேசினாலும், அவர்கள் உள்ளுக்குள் இருக்கும் புழுக்கம் எல்லோருக்கும் தெரியும். அது காலம் நேரம் வரும் போது தெரியும்.

    தி.மு.க.வில் நிலை அப்படித்தான் உள்ளது. எங்கள் நிலை இப்படித்தான் என்று சொல்லாமல் சொல்கிறார் கே.என்.நேரு.

    மாற்றம் என்று சொல்லிய தி.மு.க. இன்றைக்கு மக்களுக்கு ஏமாற்றத்தினை பரிசாக தந்துள்ளது. அனைத்து தரப்பு மக்களும் கொதித்து போய் உள்ளனர்.

    தி.மு.க.விற்கு வாக்களிக்க மக்கள் தயாராக இல்லை, பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. 40 தொகுதிகளிலும் மகாத்தான வெற்றி பெறும்.

    எல்லா கட்சிகளும் தனியாக போட்டியிட தயராக இருந்தால், அ.தி.மு.க.வும் தனித்து நிற்க தயராக உள்ளது.

    தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை வரவுள்ள நிலையில் ஆவினில் பால், ெநய், வெண்ணை உள்ளிட்ட வைகளின் விலைகளை உயர்த்தி உள்ளனர். மக்கள் மீது தி.மு.க. அரசு தொடர்ந்து சுமையை தான் சுமத்துகிறது என்பதை நிரூபித்துள்ளது .

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×