search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தச்சநல்லூரில் திருமணமான 4 மாதத்தில் புதுப்பெண் மாயம்
    X

    தச்சநல்லூரில் திருமணமான 4 மாதத்தில் புதுப்பெண் மாயம்

    • தச்சநல்லூரை சேர்ந்த சிவனனைந்த பெருமாள் என்பவர் சென்னையைச் சேர்ந்த ஐஸ்வர்யா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
    • வீட்டில் இருந்து மாயமான புதுப்பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர்.

    நெல்லை:

    நெல்லை தச்சநல்லூர் அழகனேரி நாடார் தெருவை சேர்ந்தவர் சிவனனைந்த பெருமாள்.

    இவர் சென்னையைச் சேர்ந்த ஐஸ்வர்யா (வயது 24) என்ற பெண்ணை கடந்த 4 மாதங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

    சிவனனைந்த பெருமாள் டவுனில் உள்ள ஒரு கடையில் டிரைவராக வேலை பார்த்து வருகிறார்.

    சம்பவத்தன்று வீட்டில் இருந்த ஐஸ்வர்யாவை திடீரென காணவில்லை.

    வேலையை முடித்துவிட்டு வீட்டுக்கு வந்த சிவனனைந்த பெருமாள், தனது மனைவியை அக்கம் பக்கத்தில் தேடி உள்ளார்.ஆனால் எங்கு தேடியும் அவர் கிடைக்கவில்லை.

    இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் தச்சநல்லூர் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து காணாமல் போன ஐஸ்வர்யாவை தேடி வருகின்றனர்.

    Next Story
    ×