என் மலர்
உள்ளூர் செய்திகள்

வேப்பனபள்ளி அருகே மோட்டார்சைக்கிள் மீது கார் மோதி சிறுவன் பலி
- கார் மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
- ஓசூர் டவுன் போலீசார் இது குறித்து விசாரித்து வருகின்றனர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பன பள்ளி அருகேயுள்ள தொட்டு கணவாய் பகுதியை சேர்ந்த சுப்பிரமணி என்பவரது மகன் கணேஷ் (வயது 12).
இந்த சிறுவன் மோட்டார்சைக்கிளில் நாடகோப்பள்ளி சாலை யில் சென்றபோது எதிரே வந்த கார் மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இந்த விபத்து குறித்து வேப்பன பள்ளி போலீசார் வழக்கு பதிந்து கார் டிரைவரை கைதுசெய்து விசாரித்து வருகின்றனர்.
இதேபோல ஓசூர் கணபதி நகரை சேர்ந்த பத்மநாபன் என்பவரது மகன் திருப்பதி(13) என்ற 8-ம் வகுப்பு மாணவன் திடீரென மாயமானான்.இந்நிலையில் ஓசூர்-தளி ரோட்டில் உள்ள கோவில் தெப்பக்குளத்தில் மூழ்கி திருப்பதி உயிரிழந்தது தெரியவந்தது.
சிறுவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பிய ஓசூர் டவுன் போலீசார் இது குறித்து விசாரித்து வருகின்றனர்.
Next Story






