search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஊத்தங்கரை அருகே  ஓட்டல் தீப்பிடித்து எரிந்து நாசம்
    X

    தீ பற்றி எரியும் காட்சி.

    ஊத்தங்கரை அருகே ஓட்டல் தீப்பிடித்து எரிந்து நாசம்

    • 2 ஆண்டுகளுக்கு முன்பு கொரோனா காலத்தில் இருந்து உணவகம் சரியான முறையில் செயல் படுவதில்லை.
    • இன்று அதிகாலை திடீரென தீப்பற்றி எரிந்துள்ளது.

    மத்தூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த வெள்ள குட்டை கிராமத்தில் பெங்களூர் -திருவண்ணாமலை தேசிய நெடுஞ்சாலையில் உணவகம் உள்ளது.

    இவ்வழியாக செல்கின்ற பேருந்துகள் இந்த ஓட்டலில் நிறுத்தி பயணிகள் மற்றும் ஓட்டுனர் நடத்துனர் உணவருந்தி செல்வது வழக்கம்.

    கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கொரோனா காலத்தில் இருந்து உணவகம் சரியான முறையில் செயல் படுவதில்லை. இந்த நிலையில் அதிகாலை திடீரென தீப்பற்றி எரிந்துள்ளது .தீவிபத்தில் உணவகம் முற்றிலும் எரிந்தது.

    இதனால் சுமார் 50,000ஆயிரம் பொருட்கள் தீயில் கருகி நாசமாகின. சிங்காரப்பேட்டை காவல் ஆய்வாளர் செல்வராஜ் நேரில் சென்று சம்பவம் நடந்த இடத்தில் ஆய்வு செய்யும் பணியில் ஈடுபட்டார். தீ விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

    Next Story
    ×