என் மலர்
உள்ளூர் செய்திகள்

கும்பாபிஷேக விழாவில் ஹோமகுண்ட சிறப்பு பூஜை செய்த சிவாச்சாரியர்கள்.
ஊத்தங்கரை அருகே பெருமாள் கோவில் கும்பாபிஷேக விழா
- யமுனை, காவிரி உள்ளிட்ட 32 புன்னிய நதிகளிலிருந்து கொண்டு வரப்பட்ட புனித நீரானது கலசங்களில் வைத்து யாகசாலையில் பூஜைகள் நடைபெற்றது.
- மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு ஆலய கோபுர கலசத்தின் மீது புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேகமானது நடைபெற்றது.
மத்தூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே உள்ள சோளகாப்பட்டி கிராமத்தில் ஸ்ரீதேவி பூதேவி ஸ்ரீ ஸ்ரீனிவாச பெருமாள் கோவிலில் மகா கும்பாபிஷேகம் திருவிழா வெகு விமர்சியாக நடைபெற்றது.
கும்பாபிஷேகத்தை யொட்டி காலை கணபதி ஹோமத்துடன் மூன்றாம் கால யாக பூஜை தொடங்கியது இதில், கங்கை, யமுனை, காவிரி உள்ளிட்ட 32 புன்னிய நதிகளிலிருந்து கொண்டு வரப்பட்ட புனித நீரானது கலசங்களில் வைத்து யாகசாலையில் பூஜைகள் நடைபெற்றது.
பின்னர் கலசங்கள் மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு ஆலய கோபுர கலசத்தின் மீது புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேகமானது நடைபெற்றது.
இந்த கும்பாபிஷேக விழாவில் கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், தருமபுரி உள்ளிட்ட மாவட்ட ங்களில் இருந்து திரளான பக்தர்கள் கலந்துக்கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.கலந்து கொண்ட பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது சோளகா ப்பட்டி ஊர் பொதுமக்கள் கும்பாபிஷேகம் ஏற்பாடு களை செய்திருந்தனர்.






