search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஊத்தங்கரை அருகே   விஷம் குடித்து பெண் தற்கொலை
    X

    ஊத்தங்கரை அருகே விஷம் குடித்து பெண் தற்கொலை

    • கடந்த சில நாட்களாக உடல்நல பாதிப்பால் சுகன்யா தவித்து வந்துள்ளார்.
    • மயங்கி கிடந்த அவரை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகேயுள்ள எலச்சூரை சேர்ந்தவர் பூங்காவனம் (வயது 28). கூலி தொழிலாளி. இவரது மனைவி சுகன்யா (25).

    கடந்த சில நாட்களாக உடல்நல பாதிப்பால் சுகன்யா தவித்து வந்துள்ளார். பல்வேறு இடங்களில் சிகிச்சை பெற்றும் குணமாகவில்லை. இதில் மனமுடைந்த சுகன்யா கடந்த 20-ந்தேதி விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். மயங்கி கிடந்த அவரை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

    அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.இதுகுறித்து பூங்காவனம் தந்த புகாரின்பேரில் ஊத்தங்கரை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    Next Story
    ×