என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
ஊத்தங்கரை அருகே பாம்பாற்று அம்மன் கோவில் கும்பாபிஷேக விழா
Byமாலை மலர்28 Jun 2022 9:07 AM GMT
- அஷ்டபந்தன மகாகும்பாபிஷேகம் நடைபெற்றது.
- ஏராளமான பக்தர்கள் திரண்டு அம்மனை வழிபட்டனர்.
மத்தூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையை அடுத்த பாம்பாறு அணையில் உள்ள ஸ்ரீ பாம்பாற்று அம்மன் திருக்கோவில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் விமரிசையாக நடைபெற்றது.
பார்வதியின் மறு உருவாக்கம் திருவருளாக்கம், அகண்ட அண்டம் என பல வடிவங்களில் ஒன்றான பாம்பாற்று அம்மனின் திருக்கோவில் புனரமைப்பு நடைபெற்று அஷ்டபந்தன மகாகும்பாபிஷேகம் நடைபெற்றது.
முன்னதாக கணபதி வழிபாடு, கோ பூஜை, சிறப்பு யாக வேள்விகள் செய்து அஷ்ட பந்தன மருந்து சாத்தப்பட்டு பல்வேறு புண்ணிய நதிகளில் இருந்து எடுத்து வரப்பட்ட புனித நீரை கலசங்களில் நிரப்பி பூஜைகள் செய்து ,வேத மந்திரங்கள் முழங்க மேளதாளங்களுடன் கோபுர கலசத்திற்கு ஊற்றப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் திரண்டு அம்மனை வழிபட்டனர். பக்தர்கள் அனைவருக்கும் புண்ணிய தீர்த்தம் தெளிக்கபட்டு அன்னதானம் வழங்கப்பட்டது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X