என் மலர்
உள்ளூர் செய்திகள்

உத்தனப்பள்ளி அருகே முதியவர் விஷம் குடித்து தற்கொலை
- முதுகுவலியால் அவதிப்பட்டு வந்தார்.
- வீட்டில் விஷம் குடித்த அவர் மருத்துவமனையில் உயிர் பிரிந்தது.
ராயக்கோட்டை,
கிருஷ்ணகிரி மாவட்டம், உத்தனப்பள்ளி அருகே உள்ள பங்கா நத்தம் கிராமத்தை சேர்ந்தவர் நாகப்பா வயது (60). இவருக்கு நீண்ட நாட்களாக முதுகு வலி இருந்து வந்தது. இதற்கு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்தும் குணமாகவில்லை.
இதனால் மனம் உடைந்த நாகப்பா சம்பவத்தன்று வீட்டில் வைத்து விஷம் குடித்தார். அவரை மீட்ட பொதுமக்கள் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
ஆனால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுதொடர்பாக அவரது மகன் திம்மராஜ் உத்தனப்பள்ளி போலீசில் புகார் கொடுத்ததின் போரல் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story






