search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    உளுந்தூர்பேட்டை அருகே  அரசு பஸ் மோதி  லாரி டிரைவர் பலி
    X

    அரசு பஸ் மோதியதில் மினி லாரி நொறுங்கி கிடக்கும் காட்சி. 

    உளுந்தூர்பேட்டை அருகே அரசு பஸ் மோதி லாரி டிரைவர் பலி

    • 5 பேருடன் விருத்தாசலம் சென்று லோடு இறக்கிவிட்டு மீண்டும் செங்குறிச்சி பகுதிக்கு திரும்பி உள்ளார்.
    • விபத்தில் மினி லாரி டிரைவர் காட்டு ராஜா சம்பவ இடத்திலேயே இறந்தார்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை தாலுகா செங்குறிச்சி பகுதியைச் சேர்ந்தவர் காட்டுராஜா (வயது 27) மினிலாரி டிரைவர். இவர் நேற்று இரவு மினி லாரியில் விஜி விக்ரம் உள்ளிட்ட 5 பேருடன் விருத்தாசலம் சென்று லோடு இறக்கிவிட்டு மீண்டும் செங்குறிச்சி பகுதிக்கு திரும்பி உள்ளார்.

    அப்போது மங்கலம் அருகே விஜயா தனியார் ஓட்டல் எதிரே வந்தபோது மினி லாரிக்கு முன்னால் வந்த அரசு பஸ் மினி லாரி மீது வேகமாக மோதியது. இந்த விபத்தில் மினி லாரி டிரைவர் காட்டு ராஜா சம்பவ இடத்திலேயே இறந்தார். . மேலும் மினிலாரியில் இருந்த 4 பேரும் படுகாயத்துடன் உயிர் தப்பினர். இதை பார்த்த அருகில் இருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்து இது குறித்து உளுந்தூர்பேட்டை போலீசருக்கு தகவல் தெரிவித்தனர்.

    தகவல் அறிந்த உளுந்தூர்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் தமிழ்வாணன்சப் இன்ஸ்பெக்டர்அரு ள்செல்வன் தலைமை யிலானபோலீசார் சம்பவஇடத்திற்கு விரைந்து வந்து படுகாயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக உளுந்தூர்பேட்டை அரசு பொது மருத்துவமனையில் சேர்த்தனர். விபத்தில் பலியான காட்டுராஜா உடலை கைப்பற்றி பிரேத பரிசோத னைக்காக அதே அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். மேலும் போலீசார் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகி ன்றனர்.

    Next Story
    ×