என் மலர்
உள்ளூர் செய்திகள்

பெரும்பாலை அருகே ஸ்ரீ வீரமாத்தியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா
- முதல் கால யாக பூஜை, சிலைகள் பிரிதிஷ்டை, இடர்களை தீர்க்கும் நாயகிக்கு இரண்டாம் கால பூஜை ஆகிய பூஜைகள் செய்யப்பட்டது.
- பெண்கள் சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் தீர்த்த குடம் மற்றும் முளைப்பாலிகையை ஊர்வலமாக எடுத்து வந்து வழிப்பட்டனர்.
பென்னாகரம்,
தர்மபுரி மாவட்டம் பென்னா கரம் அருகே பெரும்பாலை பஞ்சாயத்துக்கு உட்பட்ட ஆலமரத்தூர் கிராமத்தில் வீரமாத்தியம்மன் அம்மன் கோவில்
மகா கும்பாபிஷேகம்
மிகவும் சிறப்பாக நடைபெற்றது.
இதில் அம்மனுக்கு முகூர்த்த கால் நடுதல், முலைப்பாடி போடுதல், மகா கணபதி யாகம், புண்ணிய தீர்த்தம் , பம்பை மேளம் முழுங்க சிறப்பு அபிஷேக பூஜை , வாஸ்து சாந்தி பூஜை, கும்ப அலங்காரம்,யாகசாலை பூஜை, அம்மனுக்கு முதல் கால பூஜை, துவர பூஜை, வேதிகார்ச்சனை, முதல் கால யாக பூஜை, சிலைகள் பிரிதிஷ்டை, இடர்களை தீர்க்கும் நாயகிக்கு இரண்டாம் கால பூஜை ஆகிய பூஜைகள் செய்யப்பட்டது.
பிரம்மஸ்ரீ ஸ்ரீ வித்யா உபாசகர் கார்த்திகேயன் ஆச்சாரியார் மற்றும் சுகவனேஷ்வரன் சிவம் ஆச்சாரியார் இந்த சிறப்பு பூஜைகளை செய்தனர்.
முதல் நாளன்று நாகாவதி ஆற்று படுக்கையில் இருந்து பெண்கள் சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் தீர்த்த குடம் மற்றும் முளைப்பாலிகையை ஊர்வலமாக எடுத்து வந்து வழிப்பட்டனர்.
பின்னர் ஆலமரத்தூர் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ வீரமாத்தியம்மன் கோவிலுக்கு பரிவார தெய்வங்களுக்கு பு ணராவர்த்தன அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது.
இதில் கோவில் தர்மகர்த்தா மற்றும் ஏராளமான பொதுமக்கள், பக்தர்கள் கலந்து கொண்டனர்.






