என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பேரிகை அருகே   மாந்தோப்பில் அளவுக்கு அதிகமாக   மது குடித்த காவலாளி சாவு
    X

    பேரிகை அருகே மாந்தோப்பில் அளவுக்கு அதிகமாக மது குடித்த காவலாளி சாவு

    • அளவுக்கு அதிகமாக மதுஅருந்தியதால் மாந்தோப்பில் பிணமாக கிடந்தார்.
    • இது போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சூளகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி தாலுகா பேரிகை அருகே நரசாபுரத்தை சேர்ந்தவர் குரப்பா (வயது50), இவரது மனைவி நரசம்மா. இவர்களுக்கு 4 பெண் குழந்தைகள் உள்ளது. அனைவருக்கும் திருமணமாகி பல்வேறு பகுதியில் வசிக்கின்றனர்.

    இந்த நிலையில் இப்பகுதியில் உள்ள ஒரு மாந்தோப்பை பெங்களுரை சேர்ந்த மஞ்சுநாதா என்பவர் வாங்கியுள்ளார். இந்த மாந்தோப்பில் காவலாளியாக குரப்பா வேலை பார்த்து வந்தார்.

    கடந்த சில நாள் முன்பு குரப்பா அளவுக்கு அதிகமாக மது அருந்தியதாக தெரிகிறது.இதனால் வீடு திரும்பாத அவரை தோட்டத்திற்கு சென்று பார்த்தனர். அப்போது குரப்பா இறந்து கிடந்தது தெரியவந்தது.

    இது குறித்து பேரிகை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். இறந்து கிடந்த குரப்பாவின் உடலை கைப்பற்றி ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இது போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×