என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தளி அருகே   காட்டு பன்றி தாக்கியதில் விவசாயி படுகாயம்
    X

    தளி அருகே காட்டு பன்றி தாக்கியதில் விவசாயி படுகாயம்

    • ஏரிக்கரையில் தினந்தோறும் ஆடு, மாடுகளை மேய்ப்பது வழக்கம்.
    • காட்டுப்பன்றி வெங்கடராமப்பா மீது பாய்ந்தது.

    தேன்கனிக்கோட்டை,

    கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை வட்டம் தளி அருகே உள்ள சானபோகனப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடராமப்பா (வயது65).

    இவர் அந்தக் கிராமத்தை ஒட்டியுள்ள வனப்பகுதியோரம் உள்ள ஏரிக்கரையில் தினந்தோறும் ஆடு, மாடுகளை மேய்ப்பது வழக்கம். அது போல் நேற்றும் ஆடுமாடுகளுடன் சென்று மாடுகளை மேய்த்துக் கொண்டிருந்த போது மாலை வனப்பகுதியிலிருந்து தீடிரென வெளியேறிய காட்டுப்பன்றி வெங்கடராமப்பா மீது பாய்ந்தது. வயதான காரணத்தினால் அவரால் ஓட முடியவில்லை.

    அதனால் கீழே விழுந்தவரை கை, கால், தொடை பகுதியில் காட்டுப்பன்றி கடித்து குதறியதால் வலியால் அலறியதால் அருகில் இருந்தவர்கள் ஓடி வந்து அவரை மீட்டு ஓசூர் அரசு மருத்துவரைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து தகவல் அறிந்த ஜவளகிரி வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் காட்டு பன்றிகள் கிராமத்திற்குள் வராதவாறு அங்கேயும் முகாமிட்டு தீவிர கண்காணித்து வருகின்றனர்.

    மாடு மேய்க்க சென்ற முதியவரை காட்டு பன்றி தாக்கிய சம்பவம் இப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    Next Story
    ×