என் மலர்
உள்ளூர் செய்திகள்

சிங்காரபேட்டை அருகே சட்டவிரோதமாக மதுவிற்ற 2 பேர் கைது
- போலீசார்கள் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
- கைதான அவர்களிடம் இருந்து 50 மதுபாட்டில்களை பறிமுதல் செய்யப்பட்டது.
மத்தூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம், சிங்காரபேட்டை பகுதியில் அனுமதியின்றி மதுவிற்பனை நடந்து வருவதாக நேற்று போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன் பேரில் போலீசார்கள் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது அனுமதி யின்றி மதுவிற்றதாக கோவிந்தாபுரம் பகுதியை சேர்ந்த ஞானசேகர் (வயது45), பாலசுப்பிரமணி (45) ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். கைதான அவர்களிடம் இருந்து 50 மதுபாட்டில்களை பறிமுதல் செய்யப்பட்டது.
கைதான அவர்களை ஊத்தங்கரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி கிருஷ்ணகிரி கிளை சிறையில் அடைக்கப்பட்டனர்.
Next Story






