search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சிங்காரப்பேட்டை அருகே   புளிய மரத்தில் தூக்கு போட்டு வாலிபர்  தற்கொலை
    X

    சிங்காரப்பேட்டை அருகே புளிய மரத்தில் தூக்கு போட்டு வாலிபர் தற்கொலை

    • கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு உள்ளது.
    • புளிய மரம் ஒன்றில் ரமேஷ் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    மத்தூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம், சிங்காரப்பேட்டை ரெட்டி வலசு பகுதியை சேர்ந்தவர் ரமேஷ் . இவருக்கு திருமணமாகி பரமேஸ்வரி என்ற மனைவியும், ஒரு மகளும், ஒரு மகனும் உள்ளனர்.

    இந்த நிலையில் ரமேஷ் வேலைக்கு செல்லாமல் மது குடித்து விட்டு ஊர் சுற்றி வந்தார். இதனால் கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு உள்ளது.

    நேற்று ஏற்பட்ட தகராறில் மனம் உடைந்த ரமேஷ் அதே பகுதியில் உள்ள புளிய மரம் ஒன்றில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இது குறித்து பரமேஸ்வரி கொடுத்த புகாரின் பேரில் சிங்காரபேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    Next Story
    ×