என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சாமல்பட்டி  அருகே   கெரிகப்பள்ளி ரெயில்வே   தரைபாலத்தை சூழ்ந்த மழை வெள்ளம்
    X

    சாமல்பட்டி அருகே உள்ள கெரிகேப்பள்ளி பகுதியில் உள்ள ெரயில்வே தரை பாலம் நீர் சூழ்ந்துள்ளதை படத்தில் காணலாம்.

    சாமல்பட்டி அருகே கெரிகப்பள்ளி ரெயில்வே தரைபாலத்தை சூழ்ந்த மழை வெள்ளம்

    • ரெயில்வே பாலத்தில் இருசக்கர வாகனங்கள் சில நேரங்களில் தண்ணீரில் சிக்கி கொண்டு வாகனங்கள் பழுதடைந்து மிகவும் இன்னலுக்கு ஆளாகின்றனர்.
    • பாலத்தில் இருந்து நீர் வெளிவருவதற்கான வழியை சீரமைக்க வேண்டும்.

    மத்தூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம், சாமல்பட்டி அருகே உள்ள கெரிகப்பள்ளியில் தென்னக ெரயில்வே தரைபாலம் கடந்த 2013-ம் ஆண்டு சாமல்பட்டி -அரசம்பட்டி செல்லும் சாலையில் அமைக்கப்பட்டுள்ளது.

    இந்த தரைப்பாலத்தில் நேற்று இரவு பெய்த மழையின் காரணமாக நீர் வெளியேறும் பாதையை தண்ணீர் அடைத்துக் கொண்டதால் தரைத்தளத்தில் அதிக அளவு நீர் வெளியேற முடியாமல் அங்கேயே தேங்கி இருந்தது.

    அந்த வழியாக எந்த வாகனமும் செல்ல முடியாமல் தத்தளித்து வருகின்றனர். இதனால் இரண்டு சக்கர வாகனத்தில் பயணம் செய்பவர்கள் பெரும் அவதிக்கு உள்ளாகின்றனர். பலநேரங்களில் அவர்களின் வாகனம் தண்ணீரில் சிக்கி கொண்டு வாகனத்தை இயக்க முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.

    மேலும் நடந்து

    செல்லக்கூடிய பொதுமக்கள் அவ்வழியாக கடைக்கவே முடியாத அவல நிலையில் தள்ளப்பட்டுள்ளனர். அந்த வழியாக செல்லும் சாம்பல் பட்டி, அத்தி வீரம்பட்டி, கெரிகப்பள்ளி கிழக்குப்பகுதி, நகரம், வெள்ளையம்பதி இந்தப் பகுதியில் உள்ள கிராம மக்கள் இருசக்கர வாகனத்தில் தான் பயணிக்கின்றனர்.

    தினந்தோறும் இப்பாதையை பல ஆயிரக்கணக்கான மக்கள் சென்று வருகின்றன. இந்த ெரயில்வே பாலத்தில் இருசக்கர வாகனங்கள் சில நேரங்களில் தண்ணீரில் சிக்கி கொண்டு வாகனங்கள் பழுதடைந்து மிகவும் இன்னலுக்கு ஆளாகின்றனர்.

    இதனால் இரண்டு சக்கர வாகனங்களில் செல்பவர்கள் மிகப்பெரிய அவதிப்படுகின்றனர். பல ஆண்டுகளாக இப்பகுதி மக்கள் இவற்றை சீர்படுத்த வேண்டும் என கோரிக்கை வைத்த நிலையிலும் இதுவரை இதற்கு தீர்வு காணப்படவில்லை. இப்பகுதியில் அதிக மழை பொழியும் போதெல்லாம் தரைப்பாலம் கட்டியதிலிருந்தே இதுபோன்ற சம்பவம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. பாலத்தில் இருந்து நீர் வெளிவருவதற்கான வழியை சீரமைக்க வேண்டும் என்பது இப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.

    Next Story
    ×