என் மலர்
உள்ளூர் செய்திகள்

ராயக்கோட்டை அருகே சொத்தை பிரித்து தராததால் விஷம் குடித்து வாலிபர் தற்கொலை
- குடும்ப சொத்தில் தனது பங்கை பிரித்து தர சொல்லி தகராறு செய்துள்ளார்.
- போதையில் விஷத்தை குடித்து விட்டார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை அருகே யுள்ள அத்தப்பள்ளம் பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணி.இவரது மகன் சிவன் (வயது 22).
குடித்துவிட்டு ஊர் சுற்றி வந்த சிவன் குடும்ப சொத்தில் தனது பங்கை பிரித்து தர சொல்லி தகராறு செய்துள்ளார். அதற்கு குடும்பத்தினர் மறுத்து விட்டனர் . இதனால் போதையில் விஷத்தை குடித்து விட்டார்.
சென்னை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட சிவன் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதுகுறித்து சிவனின் சகோதரர் முத்து தந்த புகாரின்பேரில் ராயக்கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Next Story






