என் மலர்

    உள்ளூர் செய்திகள்

    ராசிபுரம் அருகேவழிப்பறியில் ஈடுப்பட்ட 2 பேர் கைது
    X

    ராசிபுரம் அருகேவழிப்பறியில் ஈடுப்பட்ட 2 பேர் கைது

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo

      நாமக்கல்:

      ராசிபுரம் திரு.வி.க. நகரை சேர்ந்தவர் சண்முகம் என்பவரது மகன் ரகுநாத் (வயது 25) கூலித்தொழிலாளி. இவர் சம்பவத்தன்று மோகனூர் காவிரி ஆற்றங்கரை அருகில் உள்ள சிவன் கோயிலுக்கு தனது நண்பர்களுடன் வந்திருந்தார். அப்போது காவிரி ஆற்றங்கரையோரம் சென்றபோது, அங்கு வந்த 2 பேர் வழிமறித்து அவரிடம் இருந்த செல்போன் மற்றும் பணம் ரூ.500-ஐ பறித்து கொண்டு கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.

      அப்போது ரகுநாத் சத்தம் போடவே அருகில் இருந்தவர்கள், வழிப்பறியில் ஈடுபட்ட 2 பேரையும் பிடித்து மோகனூர் போலீசில் ஒப்படைத்தனர். பின்னர் போலீஸ் எஸ்.ஐ துர்க்கைசாமி விசாரணை செய்ததில், காட்டு பிள்ளையார் கோயில் பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் மகன் விக்ரம் (21) மற்றும் 16 வயது சிறுவன் ஆகியோர் வழிப்பறியில் ஈடுபட்டது தெரிய வந்தது. இதையொட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

      Next Story
      ×