என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    போச்சம்பள்ளி அருகே  டிராக்டர் கவிழ்ந்து விவசாயி பலி
    X

    போச்சம்பள்ளி அருகே டிராக்டர் கவிழ்ந்து விவசாயி பலி

    • திடீரென கட்டுபாட்டை இழந்து சாலையில் எதிர்பாராதவிதமாக டிராக்டர் தலைகுப்புற கவிழ்ந்தது.
    • விபத்தில் சிக்கியவரை மீட்க முயன்றனர். ஆனால் பரிதாபமாக பழனி உயிரிழந்தார்.

    மத்தூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்துள்ள புலியம்பட்டி பகுதியை சேர்ந்தவர் பழனி (வயது45). விவசாயியான இவர் டிராக்டர் சொந்தமாக வைத்துள்ளார்.

    இந்த நிலையில் நேற்று இவர் டிராக்டரில் புலியம்பட்டி வளைவு பகுதியில் சென்று ெகாண்டிருந்தார். அப்போது திடீரென கட்டுபாட்ைட இழந்து சாலையில் எதிர்பாராதவிதமாக டிராக்டர் தலைகுப்புற கவிழ்ந்தது.

    இதனை பார்த்த அந்த வழியாக வந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனே விபத்தில் சிக்கியவரை மீட்க முயன்றனர். ஆனால் பரிதாபமாக பழனி உயிரிழந்தார்.

    இது குறித்து போச்சம்பள்ளி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

    விபத்தில் பலியான பழனியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக போச்சம்பள்ளி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இது தொடர்பாக போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×