என் மலர்
உள்ளூர் செய்திகள்

போச்சம்பள்ளி அருகே அடையாளம் தெரியாத மூதாட்டி பிணம்
- 60 வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஒருவர் பிணமாக கிடப்பதாக புகார் கொடுத்தார்.
- மூதாட்டியின் உடலை கைப்பற்றி கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனை பிண அறைக்கு அனுப்பிவைத்தனர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகேயுள்ள மாறப்பநாயக்கன்பட்டி கிராம நிர்வாக அதிகாரி சதாசிவம் (வயது 32) என்பவர் திருப்பத்தூர்-தருமபுரி சாலையில் உள்ள பனங்காட்டு பகுதியில் 60 வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஒருவர் பிணமாக கிடப்பதாக புகார் கொடுத்தார்.
அதன்பேரில் போச்சம்பள்ளி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அந்த மூதாட்டியின் உடலை கைப்பற்றி கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனை பிண அறைக்கு அனுப்பிவைத்தனர்.
இறந்து கிடந்தவர் யார்?எந்த ஊரை சேர்ந்தவர்?எப்படி இறந்தார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story






