search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    போச்சம்பள்ளி அருகே   சிறுவன் திடீர் மாயம்
    X

    போச்சம்பள்ளி அருகே சிறுவன் திடீர் மாயம்

    • போச்சம்பள்ளி பகுதியில் தங்கி பிளாஸ்டிக் சேர்கள் விற்று வருகிறார்.
    • பல்வேறு இடங்களில் தேடியும் ஆதம் குறித்து எவ்வித தகவலும் கிடைக்கவில்லை.

    மத்தூர்,

    ஆந்திர மாநிலம் நெல்லூரை சேர்ந்தவர் சச்சலா பாலகிருஷ்ணன்.

    இவர் தனது குடும்பத்துடன் கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி பகுதியில் தங்கி பிளாஸ்டிக் சேர்கள் விற்று வருகிறார்.

    இவரது மகன் ஆதம் (வயது 10). கடந்த 8-ந்தேதி முதல் ஆதமை காணவில்லை.பல்வேறு இடங்களில் தேடியும் ஆதம் குறித்து எவ்வித தகவலும் கிடைக்கவில்லை.

    இதையடுத்து போச்சம்பள்ளி போலீசில் சச்சலா பாலகிருஷ்ணன் புகார் செய்துள்ளார்.

    இந்த புகாரின்பேரில் போச்சம்பள்ளி போலீசார் வழக்கு பதிந்து மாயமான ஆதம் குறித்து விசாரித்து வருகின்றனர்.

    Next Story
    ×