என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பாரூர் அருகே  புதுமாப்பிள்ளை தற்கொலை
    X

    பாரூர் அருகே புதுமாப்பிள்ளை தற்கொலை

    • இரண்டு மாதங்களுக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்டார்.
    • தற்கொலை சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மத்தூர் ,

    கிருஷ்ணகிரி மாவட்டம் குன்னி கோட்டை பகுதியை சேர்ந்தவர் சத்தியமூர்த்தி (வயது 22). இவரது மனைவி கீர்த்தி. கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்டார்.

    கணவன், மனைவி இடையே குடும்ப தகறாரு எபட்டுள்ளது. இதில் மனம் உடைந்த சத்தியமூர்த்தி துப்பட்டாவால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதுகுறித்து அவரது தந்தை மாரியப்பன் கொடுத்த புகாரின்பேரில் பாரூர் போலீசார் வழக்கு பதிவு செய்து சத்தியமூர்த்தியின் உடலை கைப்பற்றி காவேரிப்பட்டணம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்த தற்கொலை சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×