என் மலர்
உள்ளூர் செய்திகள்

நாகரசம்பட்டி அருகே இளம்பெண்ணை கடத்திய வாலிபர்
- பல்வேறு இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை.
- ஆறுமுகம் நாகரசம்பட்டி போலீசில் எனது மகளை பாரூர் பகுதியை சேர்ந்த ஆனந்த் என்பவர் கடத்தி சென்றதாக புகார் கொடுத்தார்.
மத்தூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம், நாகரசம்பட்டி அடுத்துள்ள பேருஅள்ளி கூட்ரோடு பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மகள் சவுமியா (வயது21). பி.எஸ்.சி. பட்டதாரியான இவர் போச்சம்பள்ளி நகைக்கடையில் வேலை பார்த்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று கடைக்கு சென்று வருவதாக கூறி சென்றவர் வீடு திரும்பவில்லை. இதனால் அவரை உறவினர் வீடு உள்பட பல்வேறு இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை.
இது குறித்து ஆறுமுகம் நாகரசம்பட்டி போலீசில் எனது மகளை பாரூர் பகுதியை சேர்ந்த ஆனந்த் என்பவர் கடத்தி சென்றதாக புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து மாயமான பெண்ணை தேடி வருகின்றனர்.
Next Story






