என் மலர்
உள்ளூர் செய்திகள்

மின்சாரம் தாக்கி இறந்த முத்துசாமி.
மேட்டூர் அருகேமின்சாரம் தாக்கி மின் வாரிய ஊழியர் பலி
- முத்துசாமி (வயது 25). இவர் திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளியில் மின்வாரிய அலுவலகத்தில் கேங்மேனாக பணியாற்றி வந்தார்.
- திப்பம்பட்டி கிராமத்திற்கு வந்த இவர் நேற்று காலை வீட்டில் மின்விளக்கு எரியாததால் அதனை பழுதுபார்க்கும் வேலை செய்து கொண்டிருந்தார்.
மேட்டூர்:
சேலம் மாவட்டம் மேட்டூர் அடுத்த திப்பம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் முத்துசாமி (வயது 25). இவர் திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளியில் மின்வாரிய அலுவலகத்தில் கேங்மேனாக பணியாற்றி வந்தார். விடுமுறைக்காக தனது சொந்த ஊரான திப்பம்பட்டி கிராமத்திற்கு வந்த இவர் நேற்று காலை வீட்டில் மின்விளக்கு எரியாததால் அதனை பழுதுபார்க்கும் வேலை செய்து கொண்டிருந்தார்.
அப்பொழுது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கியது. இதில் இவர் மயக்கம் அடைந்தார். அருகே இருந்தவர்கள் அவரை மீட்டு மேட்டூர் அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். முத்துசாமியை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தகவல் தெரிவித்தனர். முத்துசாமி உடலை பார்த்து அவரது உறவினர்கள் கதறி அழுதது பார்க்க பரிதாபமாக இருந்தது. இந்த சம்பவம் குறித்து கருமலைக்கூடல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.






