என் மலர்
உள்ளூர் செய்திகள்

மத்தூர் அருகே சிகிச்சை பலனின்றி வாலிபர் சாவு
- குடும்ப தகராறு காரணமாக வினோத்குமார் தூக்கில் தொங்கினார்.
- மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
மத்தூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே உள்ள கெங்கபிராம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் வினோத்குமார் (வயது 32).இவரது மனைவி புனிதா (25).இவர்களுக்கு குழந்தைகள் இல்லை.
கடந்த மாதம் 17-ந்தேதி குடும்ப தகராறு காரணமாக வினோத்குமார் தூக்கில் தொங்கினார்.அவரை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதையடுத்து பல்வேறு ஊர்களிலும் வெவ்வேறு மருத்துவமனைகளில் அவருக்கு சிகிச்சை அளித்துள்ளனர்.
எந்த வித முன்னேற்றமும் இல்லாத நிலையில் தருமபுரி மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி வினோத்குமார் நேற்று இரவு உயிரிழந்தார்.
இது குறித்து ஊத்தங்கரை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Next Story






