என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
மத்தூர் அருகே மாயமானதாக தேடப்பட்ட பெண் கிணற்றில் பிணமாக மீட்பு
- விவசாய கிணற்றுக்குள் கண்ணகி பிணமாக மிதந்தது தெரியவந்தது.
- போலீசார் விரைந்து வந்து கண்ணகியின் உடலை கைப்பற்றி மத்தூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
மத்தூர் ,
கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் அருகேயுள்ள கவுண்டனூரை சேர்ந்தவர் சம்பத். இவரது மனைவி கண்ணகி (வயது 45).
இவர்களுக்கு ஒரு மகன், 2 மகள்கள் உள்ளார். கண்ணகிக்கு கடந்த சில மாதங்களாக மனநிலை பாதிக்கப்பட்டு அதற்காக சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
இந்நிலையில் கடந்த 7-ந்தேதி வீட்டை விட்டு வெளியே சென்ற கண்ணகி அதன்பிறகு வீடு திரும்பவில்லை.பல்வேறு இடங்களில் தேடியும் அவர் பற்றி எந்தவிதமான தகவலும் கிடைக்கவில்லை.
இந்நிலையில் சம்பத்துக்கு சொந்தமான விவசாய கிணற்றுக்குள் கண்ணகி பிணமாக மிதந்தது தெரியவந்தது. இதுகுறித்து மத்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
போலீசார் விரைந்து வந்து கண்ணகியின் உடலை கைப்பற்றி மத்தூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
கண்ணகி கிணற்றுக்குள் தவறி விழுந்து இறந்தாரா?அல்லது தற்கொலை செய்துகொண்டார்? என்று பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்