search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மத்தூர் அருகே  கந்துவட்டி கேட்டு மிரட்டியதாக  2 பேர் மீது வழக்கு
    X

    மத்தூர் அருகே கந்துவட்டி கேட்டு மிரட்டியதாக 2 பேர் மீது வழக்கு

    • பெண்ணிடம் கந்து வட்டி கேட்டு மிரட்டிய தம்பதி தப்பியோட்டம்.
    • 1 லட்சத்திற்கு 5 லட்சம் கேட்டுள்ளதால் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.

    மத்தூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூர் அடுத்துள்ள கோடிப்பதி பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணன். இவரது மனைவி அம்பிகா. இவர் அதே பகுதியை சேர்ந்த இளவரசன் (30), இவரது சித்ரா ஆகியோரிடம் கடந்த 2018-ம் ஆண்டு வட்டிக்கு ரூ.1 லட்சத்து 10 ஆயிரம் பணம் வாங்கியுள்ளார்.

    இந்த நிலையில் அந்த பணத்திற்கு வட்டியும், முதலும் அம்பிகா கொடுக்காமல் இருந்து வந்தார். அதனால் வாங்கிய பணம் எல்லாம் சேர்த்து ரூ.5 லட்சமாக தர வேண்டும் என்று சித்ரா தனது கணவருடன் சென்று மிரட்டியுள்ளார்.

    இது குறித்து அம்பிகா மத்தூர் போலீசில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் கந்து வட்டி கேட்டு மிரட்டியதாக இளவரசன், சித்ரா ஆகியோர் மீது வழக்குபதிவு செய்து அவர்களை தேடி வருகின்றனர்.

    Next Story
    ×