என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மத்தூர் அருகே  டிராக்டர் மீது மோதி  வாலிபர் சாவு
    X

    மத்தூர் அருகே டிராக்டர் மீது மோதி வாலிபர் சாவு

    • முன்னால் சென்ற டிராக்டர் மீது இருசக்கர வாகனம் எதிர்பாராதவிதமாக மோதியது.
    • சிகிச்சை பலனின்றி நேற்றிரவு கோவிந்தராஜ் பரிதாபமாக உயிரிழந்தார்.

    மத்தூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூர் அடுத்துள்ள பெரமகவுண்டனூர் பகுதியை சேர்ந்தவர் கோவிந்தராஜ் (வயது27). இவரும் போச்சம்பள்ளிைய சேர்ந்த ஆறுமுகம் ஆகியோர் இருசக்கர வாகனத்தில் மத்தூர் அருகே கமலாபுரம் மாரியம்மன் கோவில் அருகில் சென்று கொண்டிருந்தனர்.

    அப்போது முன்னால் சென்ற டிராக்டர் மீது இருசக்கர வாகனம் எதிர்பாராதவிதமாக மோதியது. இதில் படுகாயம் அடைந்த கோவிந்தராஜை மீட்டு சிகிச்சைக்காக மத்தூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்றிரவு கோவிந்தராஜ் பரிதாபமாக உயிரிழந்தார்.

    இது குறித்து மத்தூர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×