என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மத்தூர் அருகேநிலத்தகராறில் மோதல்; 3 பேர் கைது
    X

    மத்தூர் அருகேநிலத்தகராறில் மோதல்; 3 பேர் கைது

    • நிலம் சம்மந்தமாக மகன்கள் 3 பேருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது.
    • இது தொடர்பாக 3 பேரும் ஒருவருக்கொருவர் தாக்கி கொண்டனர்.

    மத்தூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூர் அடுத்துள்ள சுண்ணாம்பட்டி பகுதியை சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவருக்கு ரமேஷ், உதயகுமார், சுபாஸ் ஆகிய 3 மகன்கள் உள்ளனர். கோவிந்தராஜ்க்கு சுமார் 7 அரை ஏக்கர் நிலம் உள்ளது. இந்த நிலம் சம்மந்தமாக மகன்கள் 3 பேருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது.

    இது தொடர்பாக 3 பேரும் ஒருவருக்கொருவர் தாக்கி கொண்டனர்.

    இது குறித்து மத்தூர் போலீசார் வழக்குபதிவு செய்து ரமேஷ், உதயகுமார், சுபாஸ் ஆகிய 3 பேரையும் கைது செய்தனர்.

    Next Story
    ×