search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மத்தூர் அருகே  கல்லூரி மாணவன் மாயம்
    X

    மத்தூர் அருகே கல்லூரி மாணவன் மாயம்

    • நேற்று வீட்டை விட்டு வெளியே சென்ற இவர் வெகுநேரமாகியும் வீடு திரும்பவில்லை.
    • உறவினர் வீடு உள்பட பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.

    மத்தூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூர் அடுத்துள்ள தொகரப்பள்ளி ஆடாளம் பகுதியை சேர்ந்தவர் கோவிந்தன் (வயது18). இவர் தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.

    நேற்று வீட்டை விட்டு வெளியே சென்ற இவர் வெகுநேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால் அவரை உறவினர் வீடு உள்பட பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.

    இது குறித்து அவரது தந்தை மத்தூர் போலீசில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து தேடி வருகின்றனர்.

    Next Story
    ×