என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மத்தூர் அருகே  ஆடு மேய்ந்த தகராறில் பெண் மீது தாக்குதல்
    X

    மத்தூர் அருகே ஆடு மேய்ந்த தகராறில் பெண் மீது தாக்குதல்

    • இவர்கள் வளர்த்து வந்த ஆடு செல்வியின் வீட்டு தோட்டத்தில் மேய்ந்ததாக கூறப்படுகிறது.
    • ஆத்திரமடைந்த கணவன்,மனைவி இருவரும் செல்வியை கற்களால் சரமாரியாக தாக்கி உள்ளனர்.

    மத்தூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஆம்பள்ளி ராம்நகர் பகுதியை சேர்ந்தவர் முருகேசன். இவரது மனைவி செல்வி (வயது 42).

    இதே பகுதியை சேர்ந்தவர் நாகராஜ்.இவரது மனைவி ராஜேஸ்வரி. இவர்கள் வளர்த்து வந்த ஆடு செல்வியின் வீட்டு தோட்டத்தில் மேய்ந்ததாக கூறப்படுகிறது.

    இதனால் அந்த ஆட்டை செல்வி கட்டிப்போட்டு வைத்துள்ளார். இது பற்றி அறிந்த நாகராஜும் அவரது மனைவி ராஜேஸ்வரியும் செல்வியின் வீட்டுக்கு சென்று தகராறில் ஈடுபட்டுள்ளனர்.

    அப்போது ஆத்திரமடைந்த கணவன்,மனைவி இருவரும் செல்வியை கற்களால் சரமாரியாக தாக்கி உள்ளனர்.

    இதில் படுகாயமடைந்து பர்கூர் அரசு மருத்துவ மனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டு உள்ள செல்வி தந்த புகாரின்பேரில் மத்தூர் போலீசார் நாகராஜ், ராஜேஸ்வரி 2 பேர் மீதும் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

    Next Story
    ×