என் மலர்
உள்ளூர் செய்திகள்

மத்திகிரி அருகே வாலிபரை தாக்கி பணம், கார் பறிப்பு
- கூகுல் பே மூலமாக 15 ஆயிரம் ரூபாயை அனுப்பினார்.
- 4 பேருக்கு போலீஸ் வலைவீசி தேடி வருகின்றனர்.
மத்திகிரி,
தருமபுரி மாவட்டம் பாலக்கோடு தாலுகாவிற்கு உட்பட்ட கல்லா அக்ரஹாரத்தை சேர்ந்தவர் வீரமணி (வயது 25). இவர ஓசூர் வக்கீல் அலுவலகத்தில் கிளர்க்காக உள்ளார். சம்பவத்தன்று இரவு ஓசூர் அருகே சொப்பட்டியில் உள்ள லே அவுட்டில் தனது நண்பரை சந்திக்க காரில் சென்றார்.
அந்த நேரம் அங்கு வந்த 2 பேர் அவரிடம் இருந்து செல்போனை பேசுவதற்காக வாங்கி கொண்டு தப்பியோடினர். அவர்களை வீரமணி விரட்டி சென்ற போது தங்களது கூட்டாளிகள் இருவருடன் சேர்ந்து அந்த வாலிபர்கள் வீரமணியை தாக்கினார்கள்.
மேலும் கூகுல் பே மூலமாக 15 ஆயிரம் ரூபாயை அனுப்பினார். அவர்களிடம் இருந்து வீரமணி தப்பினார். இதையடுத்து அவரது காரை அந்த வாலிபர்கள் திருடிச் சென்றனர். இதில் காயமடைந்த வீரமணி தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனும திக்கப்பட்டார்.
இந்த நிலையில் வீரமணி கொடுத்த புகாரின் பேரில் மத்திகிரி போலீசார் விசாரணை நடத்தினார்கள். அதில் இந்த வழிப்பறியில் ஈடுபட்டது குருபட்டியை சேர்ந்த இம்ரான் (23), முஸ்ரப் (22), ஆனந்த் (22), ஆரிப் (19) என தெரிய வந்தது. அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து மத்திகிரி போலீசார் அவர்களை தேடி வருகிறார்கள்.






