என் மலர்
உள்ளூர் செய்திகள்

மத்திகிரி அருகே தண்ணீர் தொட்டியில் மூழ்கி சிறுவன் பலி
- விளையாட சென்ற சந்தீப் எதிர்பாராத விதமாக தண்ணீர் தொட்டி ஒன்றில் தவறி விழுந்துள்ளான்.
- நீச்சல் தெரியாத சந்தீப் நீரில் மூழ்கி உயிரிழந்தான்.
கிருஷ்ணகிரி.
கிருஷ்ணகிரி மாவட்டம், மத்திகிரி போலீஸ் சரகம் மூக்கண்டப்பள்ளி பகுதியை சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவரது மகன் சந்தீப் (வயது15).
தனியார் பள்ளி ஒன்றில் 10-ம் வகுப்பு படித்து வந்தான். அப்பகுதியில் விளையாட சென்ற சந்தீப் எதிர்பாராத விதமாக தண்ணீர் தொட்டி ஒன்றில் தவறி விழுந்துள்ளான். நீச்சல் தெரியாத சந்தீப் நீரில் மூழ்கி உயிரிழந்தான்.
இது குறித்து கோவிந்தராஜ் கொடுத்த புகாரின் பேரில் மத்திகிரி போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
Next Story






