என் மலர்
உள்ளூர் செய்திகள்

மத்தூர் அருகே டீ மாஸ்டரை தாக்கிய 2 பேர் கைது
- டீ குடிக்க வந்த சசிகுமார், யோகப்பிரியன் ஆகிய 2 பேருக்கும் ரஞ்சித்குமாருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
- சசிகுமார்,யோகப்பிரியன் 2 பேரையும் கைது செய்தனர்.
ஊத்தங்கரை,
கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் அருகேயுள்ள கண்ணம்பட்டியை சேர்ந்தவர். ரஞ்சித்குமார்.
இவர் அப்பகுதியில் உள்ள டீக்கடை ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். அந்த கடைக்கு டீ குடிக்க வந்த சசிகுமார், யோகப்பிரியன் ஆகிய 2 பேருக்கும் ரஞ்சித்குமாருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
இதில் 2 பேரும் சேர்ந்து ரஞ்சித்குமாரை தாக்கியுள்ளனர். இதில் காயமடைந்த ரஞ்சித்குமார் தந்த புகாரின் பேரில் மத்தூர் போலீசார் வழக்கு பதிந்து சசிகுமார்,யோகப்பிரியன் 2 பேரையும் கைது செய்தனர்.
Next Story






