என் மலர்
உள்ளூர் செய்திகள்

மத்தூர் அருகே மதுபோதையில் கிணற்றில் தவறி விழுந்தவர் சாவு
- திருப்பதி மதுபோதையில் ஊராட்சி மன்ற அலுவலகம் அருகில் உள்ள கிணற்றில் தவறி விழுந்து இறந்து கிடந்தார்.
- தீயணைப்புத்துறையினர் நீண்ட நேரம் போராடி கிணற்றில் இருந்து திருப்பதியை மீட்டனர்.
மத்தூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூர் அடுத்துள்ள கோடிபதி பகுதியை சேர்ந்தவர் திருப்பதி (வயது32). இவரது மனைவி அனிதா (28). போச்சம்பள்ளியில் தபால்காரராக திருப்பதி வேலை பார்த்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று திருப்பதி மதுபோதையில் ஊராட்சி மன்ற அலுவலகம் அருகில் உள்ள கிணற்றில் தவறி விழுந்து இறந்து கிடந்தார்.
இதனை பார்த்த அருகில் இருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இது பற்றி மத்தூர் போலீசாருக்கும், போச்சம்பள்ளி தீயணைப்பு துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் அவர்கள் விரைந்து வந்தனர்.
தீயணைப்புத்துறையினர் நீண்ட நேரம் போராடி கிணற்றில் இருந்து திருப்பதியை மீட்டனர். பின்னர் அவரது உடலை போலீசார் மத்தூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இது தொடர்பாக மத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story






