என் மலர்
உள்ளூர் செய்திகள்

மத்தூர் அருகே இளம்பெண் திடீர் மாயம்
- வீட்டில் இருந்து வெளியே சென்றவர் மாயம்.
- போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
ஊத்தங்கரை,
கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் அருகேயுள்ள கோட்டூர் கிராமத்தை சேர்ந்தவர் ரவி (எ ) முருகன்.
இவரது மகள் ப்ரீத்தி (வயது 18). பிளஸ்-2 படித்து விட்டு வீட்டில் இருந்து வந்தார். நேற்று வீட்டில் இருந்து வெளியில் சென்ற அவர் அதன்பிறகு வீடு திரும்பவில்லை. பல்வேறு இடங்களில் விசாரித்தும் ப்ரீத்தி குறித்து எந்த தகவலும் கிடைக்க வில்லை.
இதையடுத்து அவரது தாய் நாகம்மாள் மத்தூர் போலீசில் புகார் செய்தார் . போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான இளம்பெண்ணை தேடி வருகின்றனர்.
Next Story






