என் மலர்
உள்ளூர் செய்திகள்

மத்தூர் அருகே உறவினர் வீட்டில் ரூ.2 லட்சம் திருடிய அண்ணன்-தம்பி கைது
- பக்கத்து வீட்டில் வசிக்கும் ரமேஷ் (37), அவரது தம்பி காந்தி(36) ஆகியோர் மீது சந்தேகப்பட்டு போலீசார் அவர்களை பிடித்து விசாரித்தனர்.
- அவர்களிடமிருந்து ரூ.1 லட்சத்து 40 ஆயிரத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.
மத்தூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் அருகேயுள்ள பிச்சினம்பட்டி பகுதியை சேர்ந்தவர் ராஜா (வயது 55).
இவரது வீட்டில் வைக்கப்பட்டிருந்த ரூ, 2 லட்சம் பணம் திருடு போனது. இது குறித்து அவர் மத்தூர் போலீசில் புகார் கொடுத்தார்.
இந்நிலையில் அவரது பக்கத்து வீட்டில் வசிக்கும் ரமேஷ் (37), அவரது தம்பி காந்தி(36) ஆகியோர் மீது சந்தேகப்பட்டு போலீசார் அவர்களை பிடித்து விசாரித்தனர்.
அப்போது அவர்கள் திருடியதை ஒத்துக்கொண்டனர்.
அவர்களிடமிருந்து ரூ.1 லட்சத்து 40 ஆயிரத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். 2 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
Next Story






