என் மலர்
உள்ளூர் செய்திகள்

குருபரப்பள்ளி அருகே புகையிலை பொருட்கள் கடத்திய வாலிபர் கைது
- வாகன சோதனையில் போது சிக்கினார்.
- 2 லட்சம் மதிப்பிலான புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம், குருபரப்பள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் அன்புமணி மற்றும் போலீசார் புளியரசிமேடு பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக வந்த ஒரு வாகனத்தை சோதனை செய்தனர். அதில் தடை செய்யப்பட்ட 450 கிலோ புகையிலை பொருட்கள் இருப்பது கண்டுப்பிடிக்கப்பட்டது. இதன் மதிப்பு சுமார் 2 லட்சத்து89 ஆயிரம் இருக்கும் என போலீசார் தெரிவித்தனர்.
வாகனத்தை ஓட்டி வந்த தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் பகுதியை சேர்ந்த குணசேகரன் (வயது36) என்பது தெரியவந்தது. உடனே அவரை போலீசார் கைது செய்தனர்.
Next Story