search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கிருஷ்ணகிரி அருகே  மின்சாரம் தாக்கி தொழிலாளி சாவு  -மற்றொரு சம்பவத்தில் பெயிண்டர் பலி
    X

    கிருஷ்ணகிரி அருகே மின்சாரம் தாக்கி தொழிலாளி சாவு -மற்றொரு சம்பவத்தில் பெயிண்டர் பலி

    • கம்பி மீது பட்டதால் அவரது உடலில் மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தார்.
    • கட்டிடத்தில் இருந்து தவறி கீழே விழுந்து உயிரிழந்தார்.

    கிருஷ்ணகிரி,

    கேரளா மாநிலம் பாலக்காடு பகுதியை சேர்ந்தவர் ரஞ்சித்(வயது 29).இவர் கிருஷ்ணகிரி பகுதியில் தங்கி கூலி வேலை செய்து வந்தார். இவர் தங்கியுள்ள வீட்டின் முன்புறம் சென்ற மின்கம்பி ஒன்று மிகவும் தாழ்வாக சென்றுள்ளது.

    எதிர்பாராத விதமாக ரஞ்சித்தின் கை அந்த கம்பி மீது பட்டதால் அவரது உடலில் மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தார்.அவரை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.ஆனால் வழியிலேயே அவர் உயிரிழந்தார். இது கிருஷ்ணகிரி டவுன் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    இதேபோல தளி அருகேயுள்ள குமார பாளையம் பகுதியை சேர்ந்த மாரப்பா (57) என்ற பெயிண்டிங் தொழிலாளி தான் வேலை பார்த்த கட்டிடத்தில் இருந்து தவறி கீழே விழுந்து உயிரிழந்தார்.

    இது குறித்து தளி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    Next Story
    ×