என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கிருஷ்ணகிரி அருகே  சூதாட்டத்தில் ஈடுபட்ட 4 பேர் கைது
    X

    கிருஷ்ணகிரி அருகே சூதாட்டத்தில் ஈடுபட்ட 4 பேர் கைது

    • 4 பேர் பணம் வைத்து சூதாடியது தெரிய வந்தது.
    • சீட்டுக்கட்டுகள்,பணம் ரூ.1,500-ஐ பறிமுதல் செய்தனர்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி டேம் போலீசார் அவதானப்பட்டி அருகேயுள்ள மாரியம்மன் கோவில்பகுதியில் உள்ள மாந்தோப்பு ஒன்றில் சூதாட்டம் நடப்பதாக கிடைத்த தகவலின் பேரில் அங்கு சென்றனர்.

    அப்போது அதே பகுதியை சேர்ந்த உமாசங்கர்(29), தேவேந்திரன் (43), திருப்பதி (38), சக்திவேல் (34) ஆகிய 4 பேர் பணம் வைத்து சூதாடியது தெரிய வந்தது.

    அவர்களை கைது செய்த போலீசார் சீட்டுக்கட்டுகள்,பணம் ரூ.1,500-ஐ பறிமுதல் செய்தனர்.

    Next Story
    ×