என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கிருஷ்ணகிரி டோல்கேட் அருகில்  உலா வந்த 3 யானைகள்
    X

    கிருஷ்ணகிரி டோல்கேட் அருகே நிற்கும் யானைகள்

    கிருஷ்ணகிரி டோல்கேட் அருகில் உலா வந்த 3 யானைகள்

    • சிப்காட் பகுதிக்குள் 3 யானைகளும் புகுந்ததால், அப்பகுதி மக்கள் அச்சம் அடைந்தனர்.
    • 30-க்கும் மேற்பட்ட வன ஊழியர்கள் நேற்று மாலை 4 மணி முதல் யானைகள் விரட்டினர்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம் சோக்காடி அருகே பனகமுட்லுவை ஒட்டிய வனப்பகுதியில் 3 யானைகள் முகாமிட்டிருந்தன. மேலும் பிக்கனப்பள்ளி, மேலுமலை வனப்பகுதியை ஒட்டியுள்ள விவசாய பயிர்களை சேதப்படுத்தி வந்தன.

    கடந்த 2 நாட்களுக்கு முன்பு குருபரப்பள்ளி சிப்காட் பகுதிக்குள் 3 யானைகளும் புகுந்ததால், அப்பகுதி மக்கள் அச்சம் அடைந்தனர். வனத்துறையினர் யானையை சானமாவு வனப்பகுதிக்குள் விரட்ட முயன்றனர். ஆனால் யானைகள் அங்கிருந்து செல்லாமல் அடர்ந்த வனப்பகுதியிலேயே முகாமிட்டு இருந்தன.

    இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு இந்த 3 யானைகளும் கிருஷ்ணகிரி அருகில் உள்ள பையனப்பள்ளி அடுத்த ஜாகிர்மோட்டூர் பகுதிக்கு இடம் பெயர்ந்தன. மேலும் அங்கிருந்த நெல் பயிர்களை தின்றும், மிதித்தும் அட்டகாசம் செய்தன. யானைகள் முகாமிட்டுள்ளதை அறிந்த பொதுமக்கள் ஏராளமானோர் அங்கு வந்தனர்.

    அப்போது அதே பகுதியைச் சேர்ந்த கல் உடைக்கும் தொழிலாளி ரவியை யானை ஒன்று துதிக்கையால் தூக்கி வீசியது.

    இது குறித்து தகவல் அறிந்த கிருஷ்ணகிரி வன அலுவலர் மகேந்திரன், ராயக்கோட்டை வன அலுவலர் பார்த்தசாரதி ஆகியோர் தலைமையில் 30-க்கும் மேற்பட்ட வன ஊழியர்கள் நேற்று மாலை 4 மணி முதல் யானைகள் விரட்டினர்.

    இந்த நிலையில் இன்றுகாலை கிருஷ்ணகிரி டோல்கேட் அருகில் அந்த 3 யானைகள் நின்று கொண்டு இருந்தது. இதனால் சாலையில் சென்ற வாகன ஓட்டிகள் யானையை வேடிக்கை பார்த்தனர். உடனே விரைந்து வந்த வனத்துறையினர் யானையை விரட்டும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

    Next Story
    ×