search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கிருஷ்ணகிரி அருகே   விடுதியில் தங்கி படித்த மாணவன் மாயம்
    X

    கிருஷ்ணகிரி அருகே விடுதியில் தங்கி படித்த மாணவன் மாயம்

    • அரசு பள்ளியில் விடுதியில் தங்கி பிளஸ் 2 படித்து வருகிறார்.
    • விடுதியை விட்டு வெளியே சென்ற மணிகண்டன் அதன்பிறகு விடுதிக்கு திரும்பவில்லை.

    கிருஷ்ணகிரி,

    தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அருகேயுள்ள போச்சாரம்பள்ளி பகுதியை சேர்ந்த சின்னசாமி என்பவரது மகன் மணிகண்டன் (வயது 17).கிருஷ்ணகிரி மாவட்டம் தளியில் உள்ள அரசு பள்ளியில் விடுதியில் தங்கி பிளஸ் 2 படித்து வருகிறார்.

    சம்பவத்தன்று விடுதியை விட்டு வெளியே சென்ற மணிகண்டன் அதன்பிறகு விடுதிக்கு திரும்பவில்லை.இது குறித்த தளி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    இதேபோல பர்கூர் பகுதியை சேர்ந்த ஜாஹீர் பாஷா என்பவரது மகளான 10-ம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர் கடந்த 14-ந்தேதி முதல் மாயமாகிவிட்டார்.இது குறித்து பெறப்பட்ட புகாரின்பேரில் பர்கூர் அனைத்து மகளிர் போலீசார் வழக்கு பதிவு செய்து மாணவியை தேடி வருகின்றனர்.

    Next Story
    ×