என் மலர்
உள்ளூர் செய்திகள்

கிருஷ்ணகிரி அருகே நிலத்தகராறில் பெண்ணை தாக்கியவர் கைது
- மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது.
- சுதாவை சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி அடுத்த ஏ.முட்லூர் பகுதியை சேர்ந்தவர் சுதா (வயது 29). இவரது பக்கத்து வீட்டில் வசிப்பவர் ஜெயக்குமார்.
இருவருக்கும் இடையே கடந்த சில மாதங்களாக நில தகராறு இருந்து வருகிறது. கடந்த 26-ந்தேதி மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது ஜெயக்குமார் சுதாவை சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது.
இதில் காயமடைந்த சுதா தந்த புகாரின் பேரில் கிருஷ்ணகிரி தாலுகா போலீசார் வழக்கு பதிந்து ஜெயக்குமாரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
Next Story






