என் மலர்
உள்ளூர் செய்திகள்

கிருஷ்ணகிரி அருகே 2 பெண்கள் மாயம்
- மாணவியை கடத்தியதாக வாலிபர் மீது புகார்.
- போலீசார் 2 பெண்களையும் தேடி வருகின்றனர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் குந்தனிப்பாறை பகுதியைசேர்ந்த பிளஸ்- 2 படித்துவிட்டு வீட்டில் இருந்த இளம்பெண் கடந்த 12-ந்தேதி முதல் மாயமானார்.
இது குறித்து அவரது தாய் வாசுகி அனைத்து மகளிர் போலீசில் தந்த புகாரில் சுண்டராம்பட்டியை சேர்ந்த டிரைவர் ஞானமூர்த்தி என்பவர் தனது மகளை கடத்தி சென்றிருக்கலாம் என்று குறிப்பிட்டுள்ளார்.
இதேபோல செக்கனஹள்ளி பகுதியைசேர்ந்த இளம்பெண் மாயமான சம்பவத்தில் சின்னக்கண்ணு என்ற வாலிபர் மீது மாயமான பெண்ணின் தாய் மாதம்மாள் பர்கூர் போலீசில் புகார் செய்துள்ளார்.
Next Story






